அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42% உயர்வு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை (DA) மத்திய மாநில அரசு குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி வருகிறது. இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதத்தில் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன்படி, ராஜஸ்தான், அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அகவிலைப்படியை கூடுதலாக 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தியது. தற்போது, இதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேச மாநிலத்திலும் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, உத்திரப்பிரதேசத்தில் அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு என மொத்தமாக 27.5 லட்சம் பேர் பயனடைவார்கள்.

மெட்ரோ கட்டுமான பணிகளில் இந்த 10 ரயில் நிலையங்கள் ரத்து., என்ன பிரச்சனை?? பரபரப்பு தகவல்!!!

இதனை கருத்தில் கொண்டு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அகவிலைப்படி மற்றும் DR கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உத்திரப் பிரதேசத்தில் தற்போது இருக்கும் அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலங்களிலும் அகவிலைப்படியை உயர்த்தி வரும் நிலையில் தமிழகத்தில் எப்போது உயரும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here