அரசு ஊழியர்களே ரெடியா இருங்க…, தீபாவளிக்கு முன் வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்!!

0
அரசு ஊழியர்களே ரெடியா இருங்க..., தீபாவளிக்கு முன் வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி, ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். இதன்படி, கடந்த ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு 42%-திலிருந்து 46%-மாக உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% அதிகரித்து 46% -மாக உயர்த்தியது.
இந்நிலையில், உத்திரப் பிரதேசமும் தங்களது அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் படி, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் ஊழியர்களும், அரசாங்கத்துடன் தொடர்புடைய 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பானது, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here