அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!!

0
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!!
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 8 ஆண்டு காலமாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு பிறகும் தமிழக அரசு காலம் தாழ்த்துவது முறையற்றது என த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இதில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடுவதை தடுக்க முதலமைச்சர் தலையிட வேண்டும். இதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையும் மீட்டு எடுக்க வேண்டும். அதேபோல் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றுள்ள அரசு ஊழியர்களுக்கு இதுவரை பணபலன்கள் கிடைக்கவில்லை. இந்த நிலுவை தொகையினையும் விரைந்து வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹாட் லுக் காட்டி இளசுகளின் இதயத்தை பந்தாடும் கேப்ரில்லா..,நண்பருடன் குதித்து குதித்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்!!

இந்த அறிக்கை குறித்து நாளைய தினம் (மார்ச் 29) நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் குடும்ப நலன் கருதி இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here