தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை – 900ஐ கடந்ததால் விழி பிதுங்கி நிற்கும் மக்கள்!!

0

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து ரூ.900.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ. 1,831 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது பல சமையல் பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை (Petrol, diesel prices) தொடர்ந்ந்து சமையல் எரிவாயுவின் விலையும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

இதற்கு முன்பு கடந்த 17 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 875.50 ஆக அதிகரித்தது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.900.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்து ரூ. 1,831 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு தற்போது இந்த விலை உயர்வு இன்னோரு இடியாக விழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here