நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தடுப்பு பணிகள் குறித்து நாட்டின் பிரதமர் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையயை விட தற்போது நாட்டில் வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய்த்தொற்று காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு நேர மற்றும் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வரவுதால் அனைத்து மாநிலமும் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.
‘தமிழகத்திற்கு 20 லட்ச தடுப்பூசிகள் உடனே வேண்டும்’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!
இந்நிலையில் நாட்டின் பிரதமர் இன்று காலை உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவிக்க உள்ளார். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நாட்டில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.