கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என புகார்கள் எழுந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தேர்வர்கள் புகார் அளித்து வந்தனர். ஆனால் இதற்கு தற்போது வரை TNPSC தேர்வாணையம் விளக்கமளிக்க வில்லை. இந்த குரூப் 4 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் படித்த பாலமுருகன் என்ற மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
அடடே.., கெத்து காட்டறீங்களே ஆலியா.., மாலத்தீவில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!!
இதனால் இவருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர். இந்த விழாவில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, கட்ச் தீவு எங்கு உள்ளது?? என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவனால் எப்படி இப்படி கேட்க முடியும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram