உடலில் அதிக அளவு சூடு இருந்தால் அதை தணிக்க நாம் பல்வேறு பழங்களை உட்கொள்கிறோம். மேலும் உணவில் அதிகப்படியான குளிர்ச்சி தரும் பொருட்களை சேர்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் தற்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரிக்காய் மற்றும் தயிர் இரண்டும் சேர்த்து நாகர்கோவில் ஸ்டைல் வெள்ளரிக்காய் பச்சடி எப்படி செய்யலாம் என இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
கெட்டியான தயிர் – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 1
செய்முறை
முதலில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய்,சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் அதன் பின்னர் வெள்ளரிக்காயை நன்கு கழுவி விட்டு உள்ள இருக்கும் சதை பகுதி மற்றும் தோலை நீக்கி விட வேண்டும். அதன் பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் தண்ணீர், உப்பு மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து வேக விட வேண்டும். வெள்ளரிக்காய் வெந்து தண்ணீர் வற்றி வரும் வேளையில் அரைத்த கலவையை சேர்த்து கலர் மாறாமல் சிறிதளவும் வதங்கி கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பிறகு கெட்டியான தயிரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். வெள்ளரிக்காய் மற்றும் தேங்காய் கலவையின் சூடேறிய பிறகு அதில் தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். அந்த பின்னர் வேறு ஒரு கடாயை வைத்து எண்ணெய்,கடுகு, மிளகு வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு அதை அந்த கலவையில் ஊற்றி கொண்டு கிளறி கொள்ளவும். தற்போது சுவையான நாகர்கோவில் ஸ்டைல் வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்