பழிக்குப் பழி வாங்குமா மும்பை இந்தியன்ஸ்?? இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதல்!!

0

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், அதற்கு மும்பை பழி தீர்க்கும் நோக்குடன் களமிறங்குகிறது. மேலும் சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் செல்ல நூலளவு வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் 2020 தொடர் பல சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மும்பையை சாய்த்து அதிரடி காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்ப தொடங்கியது. இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி இந்த அளவிற்கு பின்தங்கி இருப்பது இதுவே முதல்முறை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அணி தேர்வு தான் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என தொடர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்காமல் கேதார் ஜாதவ், சாவ்லா என தொடர்ந்து சொதப்பி வந்த வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசி போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த போது, அதற்காக தோனி கூறிய காரணம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறிய தோனியை, முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விளாசி தள்ளினார். தமிழக வீரர் ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவ் இடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். ரசிகர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர். மேலும் சென்னை அணியின் பிளே ஆப் கனவும் இம்முறை தகர்க்கப்படும் நிலையில் உள்ளது. வரும் போட்டிகளில் ஆவது இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என அசுர பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சரிவர ஆடவில்லை என்றாலும் பிற வீரர்கள் அதிரடி காட்டி வருவது அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது. இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதனால் அதன் பிளே ஆப் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

சென்னை அணி கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டாலும், இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தினால் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here