லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற CSK அணியின் தல தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக, மனன் வோஹ்ரா (10) கைல் மேயர்ஸ் (14), கரண் சர்மா (9), க்ருணால் பாண்டியா (0) என அடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், லக்னோ அணி 6 ஓவர் முடிவதற்குள், 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, மார்கஸ் ஸ்டோனிஸும் 6 ரன்களில் ஜடேஜாவிடம் தனது விக்கெட்டை இழந்தார். இந்த தொடர் சரிவில் இருந்து, அணியை மீட்க நிக்கோலஸ் பூரன் (20), கிருஷ்ணப்பா கவுதம் (1), ஆயுஷ் படோனி (59*) முயற்சித்தனர்.
இதனால், 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை லக்னோ அணி எடுத்திருந்தது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபொழிவு பதிவாகியதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.