இந்தியாவில் 14வது ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் உட்பட 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது. சமீப காலமாக கொரோனா தொற்றினால் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றிற்கு மத்தியில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இருந்தும் இந்தியாவில் மிக பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று கொல்கத்தா அணி வீரர்களான வருண் மற்றும் சந்தீப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இன்றைய போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்பரவல் எதிரொலி – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு!!
தற்போது இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அணியின் சி.இ.ஓ காசிவிஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.