இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என்று அழைக்கப்படக்கூடிய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழித்து வருகிறார். அந்த வகையில், தனது குடும்பத்தாருடன் இருக்கும் தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் சச்சின்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலங்களில் சமையல் செய்து தனது குடும்பத்தை அசத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருந்தது. அந்த வகையில், தற்போது சச்சின் விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் இருந்தனர்.
பூஜையுடன் துவங்கிய SK-21….,பயங்கரமான டீமா இருக்கும் போலயே…..,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீங்கள் வாழ்க்கையில் அரை நூற்றாண்டை அடைவது ஒவ்வொரு நாளும் அல்ல. அது நடக்கும் போது, மிகவும் முக்கியமானவர்களுடன் கொண்டாடுவது சிறப்பு. சமீபத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் 50வது சிறப்பு தின விழாவை எனது குழு மற்றும் எனது குடும்பத்தினருடன் கொண்டாடினேன்’ என்று தெரிவித்துள்ளார்.