இலங்கையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய அணி வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இன்று நடைபெற வேண்டிய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 3 டி20 போட்டிகளில் முதல் போட்டி ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா அதில் வெற்றி பெற்று 1-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆல் ரவுண்டரான க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனிமைப்படுத்தபட்டு உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் இன்று ஒத்திவைக்கப்பட்ட போட்டி நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்