இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவிஷில்டுக்கு இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
அவசர கால அனுமதி :
உலகம் முழுவதும் பரவியுள்ள கோவிட்19 தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருந்து வருகிறது. இதில், அரசு சார்பாக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஸ்பைஸர் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி புனேவின் சீரம் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு அண்மையில் இருந்த வந்தது. இப்பொழுது இந்த கட்டுப்பாடு தேவையில்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளில் இருந்தும் எதிர்ப்பு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் தயாரிப்பான கோவிஷில்டு தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி தருவதாக பிரிட்டன் அறிவித்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்