நீங்க செலுத்தி கொண்டது கோவிஷீல்டு தடுப்பூசியா – அப்போ கண்டிப்பா இத பாருங்க!!

0

இந்தியா முழுவதும் கொரோனோவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றே மாதங்களில் தனது செயல் திறனை இழப்பதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செயல்திறன் இவ்ளோ தான் :

கொரோனாவுக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள முக்கால்வாசி பேருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்ட மூன்றே மாதங்களில் அதன் செயல்திறனை இழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட ஸ்காட்லாந்தின் 20 லட்சம் நபர்கள் மற்றும் பிரேசிலின் 4 கோடிக்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை மேற்கொண்டதில் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில், இது போன்ற முடிவுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here