இங்கிலாந்தில் தொற்று பரவல் அதிகம் உள்ளதால், இனி 12 முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தடுப்பூசி:
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை இந்த நோய்க்கு தடுப்பூசி செலுத்துதல் ஒன்று மட்டுமே ஆயுதமாக இருந்து வருகிறது. மேலும், கோவாக்சின், கோவிஷில்டு, மாடர்னா மற்றும் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்ற அச்சம் இருப்பதால் குழந்தைகளுக்கான தடுப்பூசியை கண்டறிந்து, அதை அதிகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் உலக நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தற்போது இங்கிலாந்தில் நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுவதால் இங்கு தடுப்பூசி செலுத்துவதை இந்த நாடு அதிகப்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல், 12 முதல் 15 வயது வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்