தமிழகத்தில் உள்ள 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
முதல்வர் துவக்கம் :
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து, தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில், டிவி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து, தடுப்பூசி செலுத்தி கொள்ள கோவின் என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது.
இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ள நேற்று இரவு 8 மணி வரை 6.35 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் இந்த பணியை முதல்வர் ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்திற்குள், போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி செலுத்தப்பட்டு 30 நிமிடம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அதன் பிறகு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்