இந்தியாவில் ஆரம்பிக்கிறதா கொரோனா 3ம் அலை?? – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

0

தற்போது உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுவதால், இன்னும் சில வாரங்களில் மூன்றாம் அலை பரவல் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நிபுணர்கள் எச்சரிக்கை:

இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 420 க்கும் அதிகமான நபர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள, மருத்துவ நிபுணர்கள் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டங்களால் இந்த மிகப்பெரிய விபரீதங்கள் ஏற்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த காரணங்களால் இன்னும் இரண்டு வாரங்களில், கொரோனா மூன்றாம் அலை பரவல் ஆரம்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் பயங்கர பீதி எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here