இந்தியாவில் கொரோனாவின் நிலை என்ன? – மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியீடு!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக  27,176 நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 284 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தகவல் வெளியீடு:

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது.  தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பல மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இதனை அடுத்து, வைரஸின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை விதித்து, தடுப்பூசி செலுத்துவதையும் அதிகப்படுத்தியது.

 இந்த நிலையில், மூன்றாம் அலை பரவல் தாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் மத்திய சுகாதார அமைப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது வரை தடுப்பூசி செலுத்துதல் ஒன்று மட்டுமே இந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஆயுதமாக பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், நாட்டில் சில நாட்கள் வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக  27,176 நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 284 பேர் உயிரிழந்ததாகவும், 38,012 குணமடைந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு சேர்த்து, ஒட்டு மொத்தமாக இதுவரை, 3,33,16,755 நபர்கள் இந்த கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாகவும், அதில் 3,25,22,171 குணமாகி உள்ளதாகவும், 3,51,087 பேருக்கு சிகிச்சை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நாட்டில் 4,43,497 பேர் இறந்துள்ளதாகவும், 75,89,12,277  நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here