கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் மிக சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை – இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
சபாஷ் சொன்ன தலைமை ஆராய்ச்சியாளர்:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பல மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இரண்டாம் அலை பரவலால் தாக்கப்பட்டுள்ள இந்தியா, விரைவில் மூன்றாம் அலை கொரோனா வைரசால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிகமாக இருந்த வைரஸ் பரவல் அரசின் தீவிர நடவடிக்கைகளாலும், தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்தியதாலும் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், தற்போது இங்கு தொற்று பரவல் எண்ணிக்கை 1%கீழ் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு முழு காரணம் மாநில அரசின் முழுமையான திட்டமிடலே என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்