தலைவிரித்தாடும் கொரோனா  – தலைநகரில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தொற்று உறுதி!!

0

தலைநகரில் உள்ள 300க்கு மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள அனைத்து காவலர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

300 பேருக்கு கொரோனா:

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் டெல்லியில் 22,751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இங்கு ஏற்கனவே, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு, முழு ஊரடங்கு குறித்து எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், தலைநகரில் உள்ள காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் உட்பட 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், தற்போது தனிமை படுத்தப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் இருந்த தொற்று பரவலை காட்டிலும், தற்போது தொற்று வேகமாக பரவுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here