கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 50,000ரூபாய் நிதியுதவி வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நிதியுதவிக்கு பரிந்துரை:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் அவல நிலை இந்த பெருந்தொற்றால் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஒரே ஆயுதமாக உள்ள தடுப்பூசியை மக்கள் தவறாது செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதில் தற்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 50,000ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆணையம் தங்களிடம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்