சீனாவில் BF7 கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் பல உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா பூஸ்டர் போடாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதாவது 5 முதல் 12 வயதிற்குள்ள குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசியின் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் முதியவர்கள், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்களும் உடனடியாக தடுப்பூசி போடவேண்டும் என்று மருத்துவக்குழு நிபுணர்கள் மத்திய அரசுக்கு கூறியுள்ளனர்.