கொரோனா பரவல் இரண்டாம் அலையை தொடர்ந்து மீண்டும் மூன்றாம் அலை வரும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் மூன்றாம் அலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது மதுரையில் கொரோனா தடுப்பூசி முன் பதிவு விவரம் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி:
உலகம் முழுவதும் அச்சுறுத்திய நோய்த்தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் தான். இதனால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் அதிகம். எனவே உலகின் மோசமான வைரஸ் என கொரோனா வைரஸ் அழைக்கப்படுகிறது. 2019ம் ஆண்டின் இறுதியில் துவங்கிய கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரவி வருகிறது.
உருமாறிய கொரோனாவாக வலம் வரும் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவேக்சின் மற்றும் வேறு சில தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகம் முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தற்போது மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்த தேதி, நேரம் முன்பதிவு செய்துகொள்ள 9823995550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.