கொரோனா தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் தாக்கதினால் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனை எடுத்துவருகின்றனர். தற்போது 19.45 லட்சம் மக்களுக்கு இந்தியா பரிசோதனை நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த இந்தியா :
கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பலரும் கொரோனா பரிசோதனை செய்து வந்தனர். கொரோனா தொற்றின் தாக்கம் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரையும் பாதித்து வந்தது. அரசு தகவலின் படி, மொத்தம் 734 மாவட்டங்களில் 310 மாவட்டங்களில் பாசிடிவ் விகிதம் 20 சதவீதத்துக்கு மேலாக உள்ளது. அதாவது நூறு பேர்களிடம் பரிசோதனை நடத்தினால் 20 பேர்களுக்கு தொற்று இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
இதுவரை எந்த நாடுகளிலும் இல்லாதவாறு ஏப்., 30 அன்று 19,45,299 பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்பட்டது. இது அமெரிக்க உட்பட எந்த நாடுகளும் இதுவரை செய்யாத பரிசோதனைகள். முதல் அலை மற்றும் இந்த இரண்டாம் அலையின் போதும் பரிசோதனைக்கான உள்கட்டமைப்பினை அதிகப்படுத்தியிருக்கிறோம். ஆய்வக எண்ணிக்கையும் கூடியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
10 கோடி பரிசோதனை கடந்த ஆண்டு ஜூலை 7-ல் நடந்தது. பிப்., மாதம் 20 கோடி பரிசோதனைகளும், மே7-ல் 30கோடி பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 2,500 வரை கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறினார்.