தமிழகத்தில் இந்த தேதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!!!

0

கொரோனா தடுப்பூசி இல்லாததால், தமிழகத்தில் ஜூன் 3 முதல்  6 வரை தடுப்பூசி போட முடியாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.பின்னர் தொடர்ந்து தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட  தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார், அதில் அவர் கூறியதாவது, “தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில்  மத்திய அரசு தாமதிப்பதால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு பணம் செலுத்திய பிறகும் தடுப்பூசி விநியோகம் தாமதமாகிறது”.

மேலும் “தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல்  6 வரை தடுப்பூசி போட முடியாது. ஜூன் 6 இல் முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும்” இவ்வாறு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஜூன் 3 முதல்  6 வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here