இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி கடந்த மணி நேரத்தில் 2,81,386, பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது மற்றும் 4,106 பேர் இந்த தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 3,78,741 மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால் சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் மோசமாக இருந்ததால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கோவிட் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள் ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மகாராஷ்டிரா தவிர கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பிற ஆறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து இரண்டு லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்திய சுகாதார அமைச்சத்தின் தரவுகளின்படி, நேற்று இக்கொடிய நோயால் 4000 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.
I like this enewz becoz Igor message true so I love ? news