ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத்தை சேர்ந்த சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீரருக்கு கொரோனா:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த வைரஸ் தாகத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என யாரும் தப்பியது இல்லை. இதில் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் அண்மையில் தொடங்கியது. இதில், வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவரோடு தொடர்பில் இருந்த ஆறு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டி குறித்த அச்சம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்