டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறது என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார்.
கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!
கொரோனா வைரஸின் தாக்கம் குறைகிறது:
தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாகவும் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11% குறைந்துவிட்டது எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர் கூறுகையில்; “கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 6,500 வழக்குகள் பதிவாகியுள்ளன மற்றும் நேர்மறை விகிதம் மேலும் 11% ஆகக் குறைந்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே கொரோனாவின் தாக்கம் டெல்லியில் குறைந்து வருகிறது. 15 நாட்களுக்குள் 1000 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, இதற்கு எங்கள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்,”என்று மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கெஜ்ரிவால் கூறினார்.அதோடு டெல்லி அரசு இன்று ஆக்ஸிஜன் வங்கியைத் தொடங்குவதாகவும், கெஜ்ரிவால் கூறினார்.”சரியான நேரத்தில் COVID நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க வேண்டியது அவசியம் என்பதால் நாங்கள் இதைத் தொடங்கினோம்” என்றும், மேலும் இதுபோன்ற 200 வங்கிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ளது எனவும் கூறினார். தேவைப்பட்டால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வீட்டு வாசலில் எங்கள் குழு ஆக்ஸிஜன் வழங்கும்,” என்றும்அவர் கூறினார்.