கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறையில் பணிபுரியும் பணியாளர்கள் எவ்வித ஓய்வும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி அமர்வு தமிழக அரசுக்கு, சிறை பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக கருதி தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற கொரோனா சம்பந்தப்பட்ட விஷயங்களை சென்னை நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் இன்றைய வழக்கு விசாரணை முடிவில் அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக எண்ணி தடுப்பூசி செலுத்த வேண்டும்.மேலும் சிறையில் பணியாற்றும் 800 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பரோலில் விடுவிக்க வாய்ப்பு உள்ள கைதிகளின் பட்டியலை தயாரிக்க தமிழக அரசை அறிவுத்தியுள்ளது.