நீதிமன்றத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு – 2 பேர் பலி..20 க்கும் மேற்பட்டோர் காயம்!!

0

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா என்ற இடத்தில் இருக்கும் கீழமை நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் சிக்கி 2 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த விபத்தில் காயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட நீதிமன்றம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் இந்த துயர சம்பவம் நடந்ததை அடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதியை தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். பட்டபகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் காரணமாக, நீதிமன்றத்துக்குள் இருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். நகரின் மையத்தில் உள்ள அந்த பகுதி இந்த சம்பவம் காரணமாக போர்க்களமாக காட்சி அளிக்கிறது. போலீசார் தற்போது இதன் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here