நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே 7ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பலரும் கலவையான விமர்சனங்களையே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் நாட்றம்பள்ளியை சேர்ந்த பரமேஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வை சரிவர எழுதவில்லை என குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து வந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
நேற்று முன்தினம் திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பலரின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இனி இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் ஈடேறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.
விராட் கோலியின் ஜெர்சி எண் 18க்கு பின் உள்ள உண்மை…, அவரை வெளியிட்ட பதிவு இதோ!!
நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இத்திட்டம் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.