அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான மானியங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வருபவர் தனது அறுவை சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த மருத்துவமனை மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் பட்டியலில் இல்லாததால் சிகிச்சைக்கான செலவு ரூ.2.60 லட்சத்திற்கு பதிலாக ரூ.31,556 மட்டுமே வழங்கி உள்ளனர். இதனை எதிர்த்து ஓய்வூதியதாரர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை., அதிரடி அறிவிப்பு!!!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனித உயிரை பாதுகாக்க உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது அரசின் கடமையாகும். குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறாததால் மருத்துவ செலவுகளை ஏற்க முடியாது எனக் கூறி தப்பிக்க முடியாது. இது போன்ற விவகாரங்களால் அரசு ஊழியர்களை நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது முறையற்றது. அவருக்கு சேர வேண்டிய தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.