விஸ்வரூபமாய் வீரியம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு!

0
விஸ்வரூபமாய் வீரியம் எடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,936 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

வீரியம் எடுக்கும் கொரோனா:

சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிக வேகத்துடன் பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மக்களை காப்பாற்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. முகக்கவசம் அணிதலும் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று வேகமாக பரவும் இடங்களில் ஊரடங்கு போடும் சுழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,936 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமின்றி தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,650 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,21,977 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,59,239 ஆகவும் பதிவாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here