ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு – 18 ஆயிரத்தை தொட்ட தொற்று எண்ணிக்கை!

0

நாட்டில் கடந்த ஒரு நாளில் கொரோனாவால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 43 பேர் இந்நோய் தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.

மீண்டும் கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த மூன்று வாரமாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கலாம் என்று அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,குணமடைந்தோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த ஒரு நாளில் புதிதாக 18,840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,36,04,394 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,386 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து தொற்றிலிருந்து குணமடைந்து 16,104 பேர் வீடு திரும்பினர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,53,980-ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் இந்த தொற்று பாதிப்பால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here