உலக முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் அல்லோலபட்டு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக பல முக்கிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 689,178,021 பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கவனத்திற்கு.., பள்ளிகள் 29ம் தேதி திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!!
அதே போல் கொரோனாவில் இருந்து விடுபட்டு 661,574,317 பேர் மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 20,721,764 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 6,881,940 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.