இந்தியாவில் மெல்ல மெல்ல உயரும் பலி எண்ணிக்கை – பாதிப்பு நிலவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!

0
இந்தியாவில் மெல்ல மெல்ல உயரும் பலி எண்ணிக்கை - பாதிப்பு நிலவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் கடந்த ஒரு நாளில் கொரோனாவின் பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வந்தாலும் கூட தினசரி கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. பொது இடங்களில் முகக்கவசம், பொது இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தொற்று பாதிப்பு நிலவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் தகவலின் படி, கடந்த ஒரு நாளில் கொரோனா தாக்கத்தால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,880 பேர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 பேர். இதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,38,47,065 ஆகவும் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,930 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,219 பேர். இதனால் ஒட்டு மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,71,653 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here