இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை – ஒரே நாளில் 2600 பேர் இறப்பு!

0
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை - ஒரே நாளில் 2600 பேர் இறப்பு!

மீண்டும் கொரோனா நாட்டில் வீரியம் எடுக்க தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,603 பேர் கொரோனா தொற்றால் பலி ஆகியுள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா:

உலகில் எல்லா நாடுகளிலும் கொரோனாவின் தொற்று மிக வேகத்துடன் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. அதிகரிக்கும் தொற்றால் மக்கள் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில் மீண்டும் நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிகை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின்படி, இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,603 பேர் இறந்துள்ளனர். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,38,03,619 ஆக உயர்ந்திருக்கிறது மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 18,517 பேர். இதனால் மொத்தமாக கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here