கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தையே கொரோனா என்ற வைரஸ் கட்டுக்குள் வைத்திருந்தது. அதனுடைய தாக்கம் அப்போது அதிகமாக இருந்த நிலையில் சமீப காலமாக அதன் வேகம் குறைய தொடங்கியது. இருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் மீண்டும் உருவெடுக்க தொடங்கி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
எனவே இது கொரோனாவின் நான்காவது அலையாக இருக்கலாம் என்று உலகமே பயந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக பல முன்னேற்பாடுகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(24.05.2023) – முழு விவரம் உள்ளே!!
அதாவது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 90 லட்சத்து 83 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் 2 கோடியே 7 லட்சத்து 8 ஆயிரத்து 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி 66 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 611 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 81 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்துள்ளனர்.