தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோன 2ஆம் அலையில் கோரா தாண்டவம்:
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையில் பரவலைத் தடுக்க நேற்று முதல் மே 24 வரை 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 232 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அரசு மருத்துவமனையில் 134 பேரும், தனியார் மருத்துவமனையில் 98 பேரும் என உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 9 ஆயிரத்து 237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரத்து 770 ஆண்களும், 5 லட்சத்து 61 ஆயிரத்து 429 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,904 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 12,40,968 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 12 லட்சத்து 40 ஆயிரத்து 968 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 389 பேர் உள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 267 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அரசு மையங்கள் 69. தனியார் மையங்கள் 198.