தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் வார இறுதி நாளான ஞாயிறு அன்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு பல்வேறு மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கட்டுக்கடங்கா வண்ணம் தொற்று அதிகரிப்பதால் கடந்த 1 ஆம் தேதி முதல் அம்மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் 15 நாட்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் அங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுகிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால், காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்து ஞாயிறன்று இயங்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்