கொரோனா தடுப்பூசியின் விலை 1000 ரூபாய்..! எப்போது தயாராகும்..? இந்திய ஆய்வு நிறுவனம் தகவல்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி தயாராகும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதன் தலைவர் அடர் பூனாவாலா கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தற்போது சோதனையில் உள்ள மாதிரிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் நல்ல முடிவைத் தந்தால் அதை உடனடியாக இந்தியாவிற்கு தந்து விடுவோம் என தெரிவித்து உள்ளார்.

ஆக்ஸ்போர்டு ஒப்பந்தம்:

கொரோனாவிற்கு தடுப்பூசி 2021ம் ஆண்டு தான் கண்டுபிடிக்க முடியும் என கூறிவந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்ற தொடங்கி உள்ளனர். அவர்கள் ஏற்கனவே மனிதர்களிடம் சோதனையை தொடங்கி விட்டதால், விரைவில் தடுப்பூசி தயாராகி விடும் என அடர் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

எபோலா வைரஸிற்கு தடுப்பூசி கண்டறிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விரைவில் கொரோனாவிற்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசியின் விலை குறித்து தற்போது கூறமுடியாது எனவும், தோராயமாக 1000 ரூபாய் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here