உலகளவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் எவ்வளவு தெரியுமா..?

0

உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் கதிகலங்கி போய் உள்ளன.

35 ஆயிரத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 7,39,385 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,56,402 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 1,42,793 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 2,490 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 97,689 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 10,779 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,470 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,304 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவின் நிலைமை..!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,071 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 29 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அப்போது தான் இதில் இருந்து தப்பிக்க முடியும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here