மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு சிறப்பு வார்டு – முன்னச்சரிக்கையில் அசத்தும் தமிழக அரசு..!

0

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸினால் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கிருந்து இந்தியா வரும் அனைவரும் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. இருப்பினும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது மற்றும் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு தனி வார்டு 8 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மதுரை விமான நிலையத்திலும் வைரஸ் தாக்குதல் குறித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகளான மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டையில் வறட்சி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here