கொரோனாவுடன் போராடி 8 மாதங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலிலேயே இருக்கும்’ – வல்லுநர்கள் தகவல்!!

0

கொரோனா பரவல் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நோய்  எதிர் சக்தியை தகவலை வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா தற்போது நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்தியா இந்த கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தது.

ஆனாலும் இப்படி மறுபடியும் இந்த நோய் பரவியுள்ளது வேதனையான ஒன்றாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கொரோனவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகம் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பட்சத்த்தில் இந்த நோய் எளிதில் தாக்கி விடுகிறது. மேலும் இந்த கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா பற்றிய தகவல் ஒன்றை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒருவருக்கு கொரோனா ஏற்படும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸுடன் தொடர்ந்து போராடுமாம். இந்த வைரஸுடன் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி 8 மாதங்களுக்கு நமது உடலிலேயே தான் இருக்குமாம். எந்த வயதினரை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உடலிலேயே 8 மாதங்கள் இருக்குமாம். இதனை கொரோனா பாதித்த நோயாளிகளின் ரத்த மாதிரிகளில் இருந்து வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here