‘சென்னையில் மேலும் 40% கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும்’ – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே அதிவேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை திடுக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக மக்கள் அனைவரையும் கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையாக பாதித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை பல பேர் கொரோனா தொற்றினால் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டை போல் தற்போதும் முழு ஊரடங்கு போடும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற பல பகுதிகளில் கொரோனா பரவல் மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் பொதுமுடக்கம் போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் 3 வாரத்தில் கொரோனா நோய்பரவல் 30 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு 20% கடந்துள்ளது என்றும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here