முதற்கட்டமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னுரிமை இடத்தில் பீகாரை பின்னுக்கு தள்ளி தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா நோய் தோற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கோவாக்சின் தடுப்பு மருந்து இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாடு முழுவதும் முதற்கட்டமாக 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் படி 50 வயதுக்கு மேற்பட்ட 26.50 கோடி பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 1 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுடன் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட 2.50 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் வாழும் உத்திரப்பிரதேசத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த உள்ளது. தமிழகத்தை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்திற்கு அளிக்காமல் தமிழகத்திற்கு அளிக்க உள்ளது. இதர கரணம் பிஹாரில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 1.84 கோடி பேர் மட்டுமே, இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட 1.95 கோடி பேர் உள்ளனர். முதல் 3 இடத்தில் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளன.