இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அதே சமயம் விலை குறைந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் பரவி தற்போது வரை 1 லட்சம் 39 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனவிற்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே போல் தடுப்பூசி தயாரிக்கப்பட்டால் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் வயதில் முதியவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியான நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களான அமித் ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதே போல் எதிர் கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல விவகாரங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.
பிரதமர் உரை:
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “கொரோனாவிற்கு எதிரான போரில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியினை தயாரிப்பதில் அரசு தற்போது முனைப்பு காட்டி வருகின்றது. இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. பரிசோதனை முடிந்தவுடன் தடுப்பூசிகள் தயாராகி விடும். தயாரானதும் தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்படும்”
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்!!
“கொரோனா தொற்று சங்கிலியை உடைப்பது தான் அரசின் நோக்கம். அதனால் முதலில், முன்கள பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான கட்டமைப்புடன் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான, அதே சமயம் மிகவும் குறைந்த விலையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறாக உரை நிகழ்த்தியுள்ளார்.