இதை செய்தால் மட்டும் தான் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் – உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு!!

0

செப்டம்பர் 1 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டும் தான் கல்லூரிக்கு வரவேண்டும் என அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. மாணவர்களும் இதற்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செப்டம்பர் 1 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை செயல்படுத்தும் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளிலும் உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here