மக்கள் தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

0

மத்திய அரசானது மாநிலங்களில் உள்ள மக்கள்தொகையின்  அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை வழங்கிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி:

சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா என்னும் பெருந்தொற்றை தடுக்கும் ஆயுதமாக கண்டுபிடிக்கப்பட்டது தடுப்பூசி. இது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.


தற்போது  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் சந்திப்பில் அமைச்சர் மன்சூக் மாண்டவியாவிடம் கோரிக்கைகள் பலவற்றை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.


அதில் இந்த மாதத்திற்குள் 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், நமது மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணியை பற்றி மத்திய அரசு பாராட்டியதாகவும் கூறியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here