தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுபோன்ற கடின நேரத்தில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசிடம் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகளின் நிலை??
தற்போது இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.64 லட்ச பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 79.14 லட்ச பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.